ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் 49 வீத பங்கை மாத்திரம் தனியார் துறையினருக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
51 வீதமான பங்கு அரசிடம் இருக்கும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
49 வீத பங்கிற்கான தகுதியான முதலீட்டாளர் ஒருவரை அடையாளங்காணும் பணியை திறைசேரியிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் கூறினார்.
கடந்த சில வருடங்களாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் நட்டமடையும் நிறுவனமாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment