வௌிநாட்டு பணப்பெறுமதிக்கு அமைய நாட்டின் நாணயப்பெறுமதி குறைவடைந்துள்ளதால், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு கிழமைகளில் வாகனங்களின் விலை 5 வீதமாக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் கூறியுள்ளார்.
சாதாரண வாகனங்களின் விலை 50 ஆயிரம் ரூபா முதல் 70 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment