அனைத்து இந்துக்களின் வீடுகளிலும் கட்டாயம் இருக்கும் ஓர் பொருள் தான் கற்பூரம். இந்த கற்பூரம் நல்ல வாசனையையும் கொண்டது. இந்த வாசனையைப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இந்த கற்பூரம் தான் இன்று பலரும் சளி பிடித்திருக்கும் போது பயன்படுத்தும் விக்ஸில் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது. கற்பூரம் இந்த விக்ஸில் சேர்க்கப்படுவதற்கு அதன் நறுமணம் மட்டுமின்றி, மருத்துவ பண்புகளும் தான் காரணம். கற்பூரம் மெழுகு போன்றது, எரியக்கூடியது மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடியது.
பழங்காலத்தில் நாட்டு மருத்துவத்தில் கற்பூரம் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த கற்பூரம் சிறிய கட்டிகளாகவும், எண்ணெய் வடிவிலும் கடைகளில் கிடைக்கும்.
கற்பூரத்தில் ஆன்டி-செப்டிக், மயக்கமூட்டும் பண்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டிராயீமிக், ஆன்டினெரஜிக், ஆன்டிஸ்பாஸ்மோடிக் போன்ற பண்புகள் அடங்கியுள்ளன.
மேலும் கற்பூரம் இரத்தச் சேர்க்கை நீக்கும் மருந்து போன்று செயல்படுவதால், மருத்துவத்தில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மருத்துவ பண்புகளாலேயே கற்பூரம் பல்வேறு ஆரோக்கிய பொருட்களில் முக்கியமான பொருளாக பயன்படுத்தப்பட்டும் வருகிறது. இப்போது இந்த கற்பூரத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.
0 comments:
Post a Comment