சென்னை திரும்பிய ரஜினிகாந்த், ரசிகர்கள் முன்பு video conference மூலம் பேசிய போது, ஆண்டவன் நமக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசியலில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்றார்.
ஆன்மீக பயணமாக இமயமலை சென்றிருந்த ரஜினிகாந்த் நேற்று (20) சென்னை திரும்பினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, மீதமுள்ள 16 மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்த பிறகு அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்.
மேலும், பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது என்று கூறிய ரஜினி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு விரைந்து அமைக்க வேண்டும் என்றார். தன் பின்னால் கடவுளும், மக்களும் உள்ளனர், பாரதிய ஜனதா இல்லை என்றார்.
இந்நிலையில், இன்று தென்சென்னை மாவட்ட, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் video conference மூலம் பேசினார். அப்போது, இதயத்தை, எண்ணங்களை தூய்மையாக வைக்க வேண்டும். ஆண்டவன் நமக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி, அரசியலில் மாற்றத்தை கொண்டு வர நாம் உழைக்க வேண்டும், சிஸ்டம் முழுவதையும் மாற்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். பதவி கிடைக்கவில்லை என்று யாரும் பொறாமையோடு இருக்காமல், ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்
0 comments:
Post a Comment