ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹூசைனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், இரு நாட்டுத் தலைவர்களின் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் 62 ஆவது குடியரசு தினத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானுக்கு பயணமானார்.
நேற்றிரவு (23) அந்நாட்டுப் பிரதமர் ஷஹீத் கான் அப்பாசியையும் ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பாகிஸ்தான் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமருடனான சந்திப்பின் போது மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment