தேர்தல் தோல்விகளைப் போன்று, கிரிக்கெட் தோல்விகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில், அதற்குப் பொறுப்பேற்று இராஜினாமா செய்ய வேண்டியது தெரிவுக்குழுவா, தலைவரா, அமைச்சரா என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன கேள்வி எழுப்பினார்.
கிரிக்கெட் போட்டிகளில் தோல்வி ஏற்படுகின்றது எனின் அணித்தலைவரே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும். கட்சி தோல்வியடைவதாயின் கட்சித் தலைவரே பொறுப்புக்கூற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர பதிலளித்தார்.
0 comments:
Post a Comment